Tuesday, February 25, 2014

ஆயுள் காப்பீட்டின் அளவை கணக்கிட ஒரு ஃபார்முலா!!

பெரும்பாலான மக்கள் ஆயுள் காப்பீட்டை ஒரு முதலீடாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆயுள் காப்பீடு என்பது ஒருவருடைய வாழ்க்கைக்கான பாதுகாப்பு என்பதை உணர மறுக்கிறார்கள். எனவே பெரும்பாலான மக்கள் ஆயுள் காப்பீட்டை வாங்கும் பொழுது முதலீடு தொகையை குறிப்பிட்ட காலத்திற்கு பின் திரும்பப் பெறும் சாத்தியங்களை ஆராய்ந்து அத்தகைய காப்பீட்டுத் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். 

ஆயுள் காப்பீட்டின் முக்கியமான நோக்கம், எதிர்பாராத சந்தர்பங்களில் உங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வலிமையை அளிப்பது மட்டுமே. அதாவது உங்கள் குடுபத்திற்கு ஏற்படும் எதிர்பாராத விபத்துகளில் இருந்து உரிய பாதுகாப்பை வழங்கி பாலிசிதாரர்களூக்கு உதவுவது ஆயுள் காப்பீடு மட்டுமே. ஆயுள் காப்பீட்டை எடுப்பதை விட சரியான அளவிற்கு காப்பீடு எடுப்பது என்பது மிக முக்கியமானது. 

முதலில், நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உங்களைச் சார்ந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால மட்டுமே ஆயுள் காப்பீடு உங்களுக்கு பயன் தரும். 

இரண்டாவது மற்றும் மிக முக்கியமான கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது உங்களூக்கு எவ்வளவு காப்பீடு இருக்க வேண்டும்?. நீங்கள் காப்பீடு அளவை கணக்கிட உதவும் கட்டைவிரல் விதியைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதாவது மாத வருமானத்தை போன்று 'x' மடங்கு என்பது அந்த விதி. ஆனால் உங்களூக்கு தேவைப்படும் காப்பீட்டின் சரியான அளவை கணக்கிட உதவும் அறிவியல் பூர்வமான வழிமுறைகள் உள்ளன. 

அறிவியல்பூர்வமாக உங்களூக்கு தேவைப்படும் சரியான காப்பீட்டு அளவை கணக்கிட உதவும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. ஆனால் அனைத்து வழிமுறைகளின் நோக்கங்களூம் ஒன்றுதான். அதாவது நீங்கள் இல்லாத நிலையில், உங்கள் மனைவி (அல்லது உங்களைச் சார்ந்தவர்) தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தரமான வாழ்க்கையை வாழ தேவைப்படும் பணத்தை உறுதி செய்வது. 

உங்கள் கணக்கீட்டை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். 35 வயது நிரம்பிய திரு சாம்ராட், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு வாழ்ந்து வருகிறார். அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அவரைச் சார்ந்து இருக்கிறார்கள். திரு சாம்ராட் குடும்பத்தின் வருடாந்திர செலவுகள் ரூ 6 லட்சம் ஆகும். இதில் திரு சாம்ராட்டினுடைய தனிப்பட்ட செலவுகளான ரூ 1 லட்சமும் அடங்கும். திரு சாம்ராட் தன்னுடைய குழந்தைகளினுடைய படிப்பு மற்றும் மகளின் திருமணத்திற்கு திட்டமிட வேண்டும். சாம்ராட் சமீபத்தில் ரூ 30 லட்சத்திற்கு ஒரு வீட்டு கடனை பெற்றுள்ளார். சாம்ராட்க்கு ரூ 50 லட்சத்திற்கு ஏற்கனவே ஒரு ஆயுள் காப்பீடு உள்ளது, ஆனால் அவருக்கு அந்த காப்பீடு அளவு என்பது பற்றாக்குறையானது எனத் தெரியும். ஆகவே அவருக்கு தேவைப்படும் காப்பீட்டு அளவு எவ்வுளவு என்பதை கணக்கிட வேண்டும். 

சாம்ராட்டினுடைய மனைவியின் தற்போதைய வயது - 28 ஆண்டுகள் 

அவருடைய மனைவியின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் - 80 ஆண்டுகள் 

சாம்ராட் இல்லாத நிலையில் அவருடைய மனைவியின் எதிர்பார்க்கப்படும் மீதி வாழ்நாள் எண்ணிக்கை - 52 ஆண்டுகள் 

சாம்ராட்டின் தனிப்பட்ட செலவுகளை தவிர்த்து தற்போதைய வீட்டு செலவுகள் - ரூ 5 லட்சம் 

வீட்டு செலவுகள் மீதான ஆண்டுப் பணவீக்கம் - 6% 

எதிர்பார்க்கப்படும் வட்டிவிகிதம் - 8% 

எதிர்காலத்திற்கான தேவைப்படும் வீட்டு செலவுகளின் தற்போதைய மதிப்பு (52 ஆண்டுகளுக்கு ) - ரூ 1.68 கோடி 

வீட்டு கடன் பொறுப்பு - ரூ 30 லட்சம் 

குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தைகள் திருமணம் போன்ற முக்கிய இலக்குகளுக்கு தேவைப்படும் பணத்தின் தற்போதைய மதிப்பு - ரூ 55 லட்சம் 

மொத்த காப்பீடு தேவை ரூ 2.53 கோடி 

மேலே கூறிய இலக்குகளை அடைய ஒதுக்கப்பட்ட பணம் - ரூ 5 லட்சம் 

தற்போதுள்ள காப்பீடு மதிப்பு - ரூ 50 லட்சம் 

காப்பீடு பற்றாக்குறை - ரூ 1.98 கோடி 

கணக்கீடு தொடர்பான சில முக்கிய அம்சங்களாவன: 

இதில் ரூ 1.68 கோடி அளவு என்பது நீங்கள் உங்களுடைய பணத்தை சுமார் 8 சதவீத வட்டி தரும் முதலீடுகளில் போட்டிருந்தால் அதிலிருந்து வரும் வட்டியை வைத்தே உங்களுடைய வழக்கமான அடிப்படை செலவுகளை சாமாளிக்க உதவும் வகையில் கணக்கிடிப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகை சுமார் 6 சதவீத பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திரு சாம்ராட்டின் மனைவி சுமார் 80 வயது வரை வாழ போதுமானது. 

தற்பொழுது உள்ள கடன்கள் மற்றும் நோக்கங்களின் தற்போதைய மதிப்பு ஆகியவற்றை சேர்ப்பது மிக முக்கியமாகும். ஏனெனில் இந்தச் செலவுகள் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கு அப்பாற்பட்டது. 

தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், சேமிப்புகள், மற்றும் ஆயுள் காப்பீட்டை கணக்கிட்டு நமக்கு தேவைப்படும் காப்பீட்டின் அளவிலிருந்து கழித்து பற்றாக்குறையை கண்டு பிடிக்கவேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமான காப்பீடு என்பது நம்முடைய தற்போதைய நிதித் தேவைகளை பாதிக்கும். 

எனவே மேலே கண்ட கணக்குகளின் படி, திரு சாம்ராட்டிற்கு தேவைப்படும் காப்பீட்டு அளவு என்பது சுமார் 2.5 கோடி ஆகும். அதில் அவருடைய தற்போதைய முதலீடு, சேமிப்பு, மற்றும் ஆயுள் காப்பீடு போன்றவற்றை கழித்தால் வருவது அவருக்கு தேவைப்படும் சரியான ஆயுள் காப்பீட்டு அளவாகும். பொதுவாக காப்பீடு தேவை என்பது காலத்தை பொருத்து மாறும். ஏனெனில் காலம் செல்லச் செல்ல நம்முடைய முதலீடு மற்றும் சேமிப்புகள் அதிகரிக்கும். மேலும் நம்மைச் சார்ந்தவர்களின் வயதும் அதிகரிக்கத் தொடங்கும். ஆகவே காலம் செல்லச் செல்ல நம்முடைய காப்பீட்டு அளவு குறைக்கப்பட வேண்டும். எனவே நமக்கு தேவைப்படும் ஆயுள் காப்பீட்டை 2 அல்லது 3 பகுதிகளாகப் பிரித்து வெவ்வேறு ஆயுள் காப்பீடுகள் வாங்குவது நமக்கு நன்மை பயக்கும். மேலும் பிற்காலத்தில் நமக்கு தேவைப்படாத காப்பீட்டை தொடரும் தொல்லையில் இருந்தும் இது காப்பாற்றும். இத்தகைய தேவைகளுக்கு டேர்ம் பாலிசிகளே மிகவும் சிறந்தது. ஏனெனில் அதன் குறைந்த பிரீமியம் உங்களுடைய நிதித் தேவைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஐஎஃப்எஸ்சி குறியீடு என்றால் என்ன?

இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் என்பதே ஐஎஃப்எஸ்சி-யின் விரிவாக்கம், ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு என்பது ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு குறியீட்டு எண் ஆகும். 

தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்த தொகை உடனடிப் பரிமாற்றம் (RTGS) போன்ற மின் பணப்பரிமாற்ற சேவையில் ஈடுபடும் ஒவ்வொரு வங்கி கிளைக்கும் ஒரு 11 இலக்க தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் வழங்கப்படும். மின்னணு நிதி பரிமாற்றத்தில் பங்கேற்றுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள் பட்டியலுடன், ஐஎஃப்எஸ்சி குறியீடுகளும் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பட்டியிலப்பட்டுள்ளது. 

11 இலக்கங்களில், முதல் 4 எழுத்துக்கள் வங்கியையும் கடைசி ஏழு இலக்கங்கள் வங்கிக் கிளையையும் குறிக்கிறது. ஐந்தாவது இலக்கம் எப்போதும் பூஜ்யம் தான். உதாரணமாக ICIC0000053 என்ற இந்த குறியீட்டை எடுத்தோமானால், முதல் 4 எழுத்துக்கள் ICICI வங்கியையும், கடையெழு எண்கள் பெங்களூரு ஜெயநகர் வங்கிக்கிளையையும் குறிக்கும். 

ICIC 0 000053 
(வங்கி அடையாளங்காட்டி) (வங்கி கிளை அடையாளங்காட்டி) 

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்க, தேசிய மின்னணு நிதி பரிமாற்ற சேவை வழங்கும் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலை புத்தகங்களில் ஐஎஃப்எஸ்சி குறியீடு அச்சிடப்பட்டுள்ளது. 

வங்கிகள் மற்றும் பொது மக்களுக்கான ஐஎஃப்எஸ்சி குறியீட்டின் முக்கியத்துவம்: 

மின்னணு நிதிப் பரிமாற்றத்தை செயல்படுத்தும் வங்கிகள், ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண்ணை கொண்டு பணத்தை குறிப்பிட்ட வங்கி மற்றும் குறிப்பிட்ட கிளைகளுக்கு ஒழுங்காக அனுப்ப பயன்படுத்துகின்றன. மேலும், தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்த தொகை உடனடிப் பரிமாற்ற (RTGS) செயல்பாடு ஐஎஃப்எஸ்சி குறியீட்டை சார்ந்திருக்கிறது. 

ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் செலுத்த விரும்பும் பொது மக்களுக்கும் ஐஎஃப்எஸ்சி குறியீடு தேவை. பணம் பெறும் வங்கிக்கிளையின் ஐஎஃப்எஸ்சி விவரங்கள் அளிக்கப்பட்டால் மட்டுமே பணம் குறிப்பிட்ட வங்கிக்கிளைக்கு போய்ச்சேரும். இந்த ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் முலம் பணப்பரிமாற்றம் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும். இது மட்டும் அல்லாமல் அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படும்.

தனி நபரா நீங்கள்?: நிதியை சேமிக்கும் வழிகளை தெரிஞ்சுக்கோங்க...


நீங்கள் இளமையான தனி நபராக இருந்து கைநிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கை கவலையற்றதாகவும், நீங்கள் அதனை மிகவும் அனுபவித்தும் வாழ்ந்து வருகிறீர்கள்.

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகள் ஏதும் இல்லாததால் நீங்கள் எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் நன்றாக செலவழிப்பதிலும், உயரிய வாழ்க்கை முறை வாழ்வதிலும், விலையுயர்ந்த வாகனங்கள் மற்றும் பெருஞ்செலவு பிடிக்கின்ற விடுமுறைகள் ஆகியவற்றிலும் நாட்டம் கொண்டிருக்கிறீர்கள். 

ஆனால், உங்களின் கவலையற்ற இந்த நிகழ்காலம், தொலைநோக்குப் பார்வையுடன் நீண்டகால நிதித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலிருந்து உங்களை தடுக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. ஏனெனில் நாளை என்ன நேரும் என்பதை யாராலும் கணிக்க இயலாது. உங்கள் நிகழ்காலம் வளமாக இருப்பின், உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாப்பாக்கக்கூடிய வகையில் திட்டமிட்டுக் கொள்ளுதல் புத்திசாலித்தனம். 

உங்கள் திட்டமிடுதல் எவ்வாறு இருக்க வேண்டுமென்றால், உங்கள் எதிர்காலம் நேர்மாறாகும் பட்சத்தில் இன்று நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கைத் தரத்தில் எதையும் இழக்காதவாறு, உங்களுக்கு கை கொடுக்கும் வண்ணம் அமைய வேண்டும். 

நீங்கள் தனிநபராக இருப்பின், நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி பார்ப்போம். 

உங்களின் தற்போதைய நிலைமை: 
நீங்கள் தற்போது உங்கள் இருபதுகளில் இருப்பதாகவும், உங்கள் சம்பள வளர்ச்சி ஒரு ஆண்டுக்கு 12 சதவீதம் உள்ளதாகவும் வைத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் 55வது வயதில் ஒய்வு பெறும்போது பணவீக்கம் ஆண்டுக்கு சுமார் 7 சதவீதமாக இருக்கும். 

இந்நிலையில், நீங்கள் செய்ய வேண்டியவை: 

செலவழிக்க தயங்காதீர்கள்: 
நன்றாக செலவழிக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்கத் தயங்காதீர்கள். நன்றாக செலவழித்தால் தான் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படும். உங்கள் மொத்த மாத சம்பளத்தில் 20 சதவீதம் உங்கள் மகிழ்ச்சிக்காகவும், திருப்திக்காகவும் செலவிடலாம். பைக் பயணங்களை அனுபவியுங்கள்; புகைப்படம் எடுக்கச் செல்லுங்கள்; அல்லது நீங்கள் மிக விரும்பும் ஏதாவதொரு செயலைச் செய்யுங்கள். 

அபாயங்களை தவிர்க்காதீர்கள்: 
நீங்கள் இளமையானவர்; இன்னும் உங்களுக்கு வயது உள்ளது. கடன் முதலீடு என்பது நேரம் குறைவாக உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கானது. உங்கள் அதிகபட்ச சேமிப்பு, பங்குகளில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பங்கு முதலீடு என்பது அபாயகரமானது தான் என்றாலும் காலப்போக்கில் அதிக லாபம் ஈட்டக்கூடியது. நீங்கள் நல்ல பங்குகளில் முதலீடு செய்தால், அது உங்கள் எதிர்காலம் முழுமைக்குமான நிதித்தேவையை ஈடு செய்யும். இதன் உச்ச விதி என்னவெனில், 100-லிருந்து உங்கள் வயதை கழித்தால் கிடைக்கும் எண்ணின் அளவுக்கான சதவீதத்தை உங்கள் சம்பாத்தியத்திலிருந்து பங்குகளுக்கு ஒதுக்கவும். 

ரொக்கத்துடன் இருங்கள்: 
உலகம் மீண்டும் பொருளியல் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, நீங்கள் வேலையை இழக்க நேரிடுகிறது. இப்போதுள்ள நிலையற்ற சந்தையில், எந்த வேலைக்கும் உத்தரவாதம் கிடையாது. எப்போழுதும் ரொக்க நிதியுடன் இருங்கள். அப்போது தான், அடுத்த ஆறு மாதத்திற்கு நீங்கள் ஒரு பைசா சம்பாதிக்காவிட்டாலும், உங்களின் தற்போதைய வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். 

நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் - 
செய்யக் கூடாதவை: 

அதிகமாக செலவழிக்காதீர்கள்: 
செலவழிப்பது நல்லது தான். ஆனால் கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்வது தவறு. உங்கள் வரையறைக்குட்பட்டு செலவழியுங்கள். உங்கள் நிதியாண்மை தொடர்பான எல்லா தவணைகளையும் கட்டிய பின்னரும், உங்களால் ஒவ்வொரு மாதமும் செலுத்தக்கூடிய அளவில் உள்ள கடன் அட்டை ரசீதுத் தொகை தான் உங்கள் வரையறை என்பது. 

தவணைத் தொகையை அதிகரித்துக் கொள்ளாதீர்கள்: 
நீண்ட கால கடன் திட்டத்தில், உங்கள் தகுதிக்கும் மீறி முதலீடு செய்யாதீர்கள். ஒரு கார் மற்றும் ஒரு வீட்டுக்கான தவணை மட்டுமே போதுமானது. இன்னொரு வீட்டை தவணை முறையில் வாங்குவதென்பது தகுந்த யோசனை அல்ல. வேலை இல்லாத நிலைமை உருவானால் எவ்வாறு தவணைத் தொகையை செலுத்த முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். 

வருங்காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்: 
ஒரு நாள் நீங்கள் தனிநபர் அந்தஸ்திலிருந்தும், கடமைகளற்ற நிலையிலிருந்தும் வெளியே வந்தே ஆக வேண்டும். அந்த சமயத்தில் கை கொடுக்கும் வகையில், முன்யோசனையோடு திட்டமிட வேண்டும். உங்களுக்கு திருமணமாகி, உங்களுக்கென ஒரு குடும்பம் உருவாகும் காலகட்டத்தை குத்துமதிப்பாக மதிப்பிடுங்கள். உங்கள் திருமணத்தின்போதும், அதற்குப் பின் குழந்தையின் படிப்புச் செலவிற்கும், அதிகமான நிதி தேவைப்படும். நீங்கள் இந்நிதித் தேவைக்கேற்ப முன்னரே திட்டமிடவில்லையென்றால், அந்தச் சமயத்தில் நீங்கள் பெரிதும் கஷ்டப்பட நேரிடும். இந்த வருங்காலத் தேவைகளுக்குத் தக்கவாறு நிதியை சேர்த்து வைப்பது அவசியம். இது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை; ஏனெனில், அது உங்கள் கைகளில் தான் உள்ளது.

இன்ஷூரன்ஸ் பாலிசி – தவிர்க்க‍ வேண்டிய தவறுகள்

ஒருவர் எதற்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்..? தனக்குப் பிறகு தன் குடும்பத்தினருக் குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி எதுவும் வந்து விட க்கூடாது என்பதற்காகத்தா னே? இவ்வளவு அக்கறை யோடு பாலிசி எடுப்பவர்களி ல் சிலர், கடைசியில் ஒரு விஷயத்தில் கோட்டை விட் டுவிடுகிறார்கள். தனக்குப் பிறகு பாலிசித் தொகை யா ருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான நாமினியை நியமிக்காமல் விட்டுவிடுகிறார்கள். அல்லது தவறான நபரை நியமித்து விடுகி றார்கள்! விளைவு பாலிசி எடுத்த நோக்கமே நிறைவேறாமல் திசை மாறி, குடும்பத்தில் குழப்பத்துக்கு வித்திட்டுவிடுகிறது. இப்ப டிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்க்க நாமினியை நியமிக்கும் போது, எந்தெந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்…
யாரை நியமிக்கலாம்?
உங்கள் பெற்றோர்கள், மனைவி, குழ ந்தைகள், உறவினர் கள், ஏன் ரத்த சம் பந்தம் அல்லாத நண்பர்களைக்கூட நாமினியாக நியமிக் கலாம். ஆனால், நாமினியாக நீங்கள் நியமிப்பவரின் பெயர் தெளி வாக இருக்க வேண்டும். வயது, முகவரி, பாலிசிதாரருக்கு என் ன உறவுமுறை போன்ற விவரங்க ளையும் தெளிவாகக் குறிப்பிட வேண் டும். நீங்கள் நியமிக்கும் நாமினி மை னராக இருந்தால் அவருக்கு காப்பாளர் ஒருவரையும் நியமிக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி?
வங்கிச் சேமிப்பு கணக்கு, பி.எஃப். போன்றவைகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி களை நியமிப்பது போல இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் போதும், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை நாமினியாக நியமிக்கலாம். அப்படி ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நிய மிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எவ்வ ளவு சதவிகிதம் பாலிசி தொகை கொடுக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறி ப்பிட்டால் எதிர்காலத்தில் இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பிரச்னை இருக்கா து.  
நாமினி இறந்துவிட்டால்?
பாலிசிதாரர் உயிரோடு இருக்கும்போதே நாமினியாக நியமிக்கப்பட்ட நபர் இறந்துவிட்டால் புதிதாக இன்னொருவரை நாமினியாக நிய மிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத் தில் உரிய படிவத்தைப்  பூர்த்தி செய்து கொடு த்தால் போதுமானது.
நாமினி அல்லாத பாலிசி?
ஒருவேளை யாருமே நாமினியாக நியமிக்கப்பட வில்லை எனில், இழப்பீட்டுத் தொகை பாலிசிதாரரின் சட்டப்படியான வாரிசுகளுக்கு கிடைக்கும். ஆனால் அவர்கள் உரிய சான்றிதழ்கள் எல்லாம் கொடுத்து கிளைம் தொகையை வாங்க சிறிது காலதாமதமாகும். இதைத் தவிர்க்க ஆரம்பத்திலேயே யாராவது ஒரு வரை நாமி னியாக நியமித்துவிடு வதே நல்லது.  
உரிமை மாற்றம்!
நாமினிக்கும் உரிமை மாற்றத்திற் கும் (அசைன்மென்ட்) வேறுபாடு உள் ளது. நாமினி என்பவர் பாலிசிதாரரின் மறைவுக்குப் பிறகு அந்தத் தொகையை பெற்றுக் கொள்ளும் உரிமையுடையவர். ஆனால், பாலிசி பத்திரத்தை வைத்து வங்கியில் கடன் வாங்கும்போது, வங் கி ஒரு கேரன்டிக்காக பாலிசி பத்திரத்தை வாங்கிக் கொள்ளும். இதையே ‘உரிமை மாற்றம்’ என்கிறோம்.
வங்கியிலிருந்து வாங்கிய கடன் முழு மையாக திருப்பிக் கட்ட ப்படும் வரை பாலிசியின் மீதான முழு உரிமையும் வங்கிக்கே உண்டு. கடன் முழுவதும் கட்டப்படாத நிலையில் பாலிசிதாரர் மறைந் துவிட்டால் இழப்பீடு அவரது குடும்பத்துக்கு கிடைக்காது; வங்கிக்கே சேரும்! இன்னொரு முக்கி யமான விஷயம் உரிமை மாற்றம் கொடுக்கும்போது நாமினி செயல் இழந்து போகும்!
‘நன்றே செய்க; அதை இன்றே செய்க’ என்பது பொதுவாழ்க்கைக்கு மட்டுமல்ல; நாமினி நியமிப்பதற்கும் நன்றாகவே பொருந்தும்!

டேர்ம் இன்ஷூரன்ஸ் நீங்க எடுத்தாச்சா?

சமீப காலமாக ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டும்’ என பலரும் வற்புறுத்தி வருவதாகச் சொல்கிறார்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள்.
இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு ணர்வு மக்களிடம் பெருகி வருவதே இதற்கு காரணம். அது என் ன டேர்ம் இன்ஷூர ன்ஸ் என்று கேட்கி றீர்களா?
பிரீமியம் மிகக் குறைவான இன்ஷூரன்ஸ் பாலிசியான இது, சுத்தமான ஆயுள் காப்பீட்டுத் திட்டம். அதாவது, உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். இல்லாவிட்டால் நாம் கட்டிய பணம் திரும்ப கிடை க்காது.
மற்ற பாலிசிகளைபோல் இதை சரண்டர் செய்தால் பணம் எதுவும் கிடையாது. அதாவது, பிரீமியம் கட்டும் காலத்தில் மட்டும்தான் இந்த பாலிசி செயல்பாட்டில் இருக்கும். எனவே, பிரீமியத்தைக் கெடு தேதி முடிவதற்குள் கட்டிவிடு வது நல்ல து. இதர லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள்போல் கெடு விதித்த காலம் முடிந்த பிறகு இந்த பாலிசியை புதுப்பித்துக் கொள்ள முடி யாது.
ஒருவருடைய ஆண்டு வருமானத்தைப் போல சுமார் 10 முதல் 15 மட ங்கிற்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்வது அ வசியம்.
இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி களை அதிக அளவில் விநியோகிக்க வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், ஏஜென்டுகளும் நினைக்கவில்லை. இந்த பாலிசி விற்றால் குறைவான கமிஷனே கிடைக்கும் என்பதால் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் இந்த பாலிசி பற்றி அதிகம் பரிந்துரைப்ப தில்லை.
‘முப்பது வயதான ஒருவர் ஒரு கோடி ரூபாய் கவரேஜுக்கு டேர்ம் பிளான் எடுத்தால், அவரது 65 வயது வரை கவரேஜ் பெற மாத பிரீமியம் சுமார் 820 ரூபாய்தான்.
குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கிறது என்பதால் தற்போது டேர்ம் பிளான்கள் அதிகம் எடுக்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆன் லைன் டேர்ம் பிளான் எடுப்பது அதிகரித்துள்ளது” என்கி றார் டேர்ம் இன்ஷூரன்ஸ் ஸ்பெலிஸ்ட் ஒருவர்.
அது சரி, நீங்க டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தாச்சா?

போலி நிதி நிறுவனங்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்துடெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என் று அவசியம் பாருங்கள்.
பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்ப ரங் களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவன மாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின்அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.
சில நிறுவனங்கள் தவணை முறையி ல் பணம் செலுத்த ச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவ ரேஜ் மற்றும் நிலம் கொடுப்பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனி ல், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடி யும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரி யாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பா ர்கள்.
மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப் படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விட லாம் அந்த நிறுவனம் போலியானது என்று!
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைக ளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.
சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண் டு அலுவலகம் திறப்பது, அவ ர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றா கும்.
அவசரப்படுத்தி முதலீடு செ ய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறு வனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய் துவைப்பது போன்றவை யும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!

பிறரை சார்ந்திராமல் வாழ, நிதி ஆலோசனை

என் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, அவர்களுக்குசீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கணும். தற்போது கை வசம் இருக்கும் சொத்துக் களை பயன்படுத்தி புதுசா வீடு கட்டணும். என் ஓய்வுகாலத்துல நானும் என் மனைவியும் பிறரை சார்ந்திராமல் வாழ முதலீடு செய்யணும். இதற்கான முதலீட்டு வழிகளை நீங்கள்தான் எனக்கு சொல்லணும்” என்று நிதி ஆலோ சனை கேட்டு வந்திருந்தார் புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேசன்.  
நாற்பத்தி இரண்டு வயதான இவர் துபாயில் உள்ள தனியார் கட்டமைப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகி றார். மாதச் சம்பளம் 30,000 ரூபாய் (இவரது தனிப்பட்ட செலவுகள், பிடித்தம் எல்லாம் போக). மனைவி பேபி பிரமிளா வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வருகி றார். இந்த தம்பதிகளுக்கு சுபஷாலினி, ஹரிகிஷோர் என்ற இரு குழந்தைகள். மகள் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பும், மகன் மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். அளவான குடும்பம் என்பதால் செலவும் குறைவுதான். இவருக்கான முதலீ ட்டுத் திட்டங்களை தெளிவாக எடுத்துச் சொன்னார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.
”வரவுக்கு ஏற்ற செலவு என்பதால் பிரச்னை இல்லாமல் நாட்கள் நகர்கின்றன. ஆனால், எதிர்காலத் தேவைகளுக்கு இதுவரை எந்த முதலீடும் செய்யவில்லை என்பதால் வருமானத்திலிருந்து 17,100 ரூபாய் குடும்பச் செலவு போக, மீதமிருக்கும் 12,900 ரூபாயை எதிர்காலத் தேவைகளுக்கு இன்றி லிருந்து முதலீடு செய்ய ஆரம்பி க்கலாம்” என்றவர், முதலில் எதிர்கால பாதுகாப்புக்கான வழி யைச் சொன்னார்.
இன்ஷூரன்ஸ்!
இதுவரைக்கும் தனது பெய ரிலும், மனைவி மற்றும் மகள் பெயரிலும் எக்கச்சக் கமாக யூலிப் பாலிசிகளை எடுத்து அதற்கு மூன்று ஆண் டுகள் மட்டும் பிரீமியம் கட்டி நிறுத்தியுள்ளார். தயவு செய் து இதற்கு மேல் அந்த யூலிப் பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட வேண்டாம்.
அதே நேரத்தில், இப்போது அந்த பாலிசிகளை சரண்டர் செய்து வெளியேறவும் வேண்டாம். குறைந்தது இன்னும் ஏழு ஆண்டுகளாவது அந்த பாலிசிகளை தொடர்வதுதான் நல்லது.
அப்படி தொடர்ந்தால் அதில் தற்போது பிரீமியமாகச் செலுத்தி இருக் கும் 1.71 லட்சம் ரூபாய்க்கு 12% வருமானம் கிடைத்தால்கூட ஏழு ஆண்டுகள் கழித்து 3.78 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்பிரு க்கிறது. (யூலிப் பாலிசியை தொடர்ந்து வைத்திருக்கத் தேவையான பணத்தை நம் பாலிசியில் உள்ள யூனிட்களை விற்ப தன் மூலம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும். இதை நான் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை.)
இது தவிர, தனது பெயரில் 2021-ல் முடிகிற மாதிரி ஒரு எண்டோவ்மென் ட் பாலிசியை எடுத்து வைத்திருக்கிறார். இதற்காக ஆறு மாதத்திற்கு 3,500 ரூபாயை பிரீமியமாக கட்டுகி றார். இந்த பாலிசியை சரண்டர் செய்து விடுவது நல்லது.
யூலிப் பாலிசி என்பதால் கவரேஜ் குறைவாக இருக்கிறது. எனவே 60 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது அவசியம். இதற்கு ஆண்டுக்கு 20,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். இதுதவிர, குடும்ப உறுப்பினர் கள் அனைவ ருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூர ன்ஸ் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 12,000 ரூபாய் கட்ட வேண்டி யிருக்கும். இன்னும் சில ஆண்டுகளு க்குப் பிறகு இந்த பாலிசியின் கவரே ஜை அதிகப் படுத்திக் கொள்வது நல்லது.
படிப்புக்கு..!
சுபஷாலினிக்கு முதுகலை கல்வி யை தரவேண்டும் என்கிறார். இதற் காக இன்றைய நிலையில் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்கிற போது, இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து குறைந்தபட்சம் 2.3 லட்ச ரூபாயாவது தேவைப்படும். அதனா ல், இன்றிலிருந்து மாதம் 2,600 ரூபாயை 15% வருமானம் எதிர்பார் க்கக் கூடிய ஈக் விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் முத லீடு செய்ய வேண்டும்.
ஹரிகிஷோர் நன்றாக படிப்பதால் அவனை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்கலாம் என்று நினைக்கிறார். இதற்கு இன்னும் பத்து ஆண்டு கள் இருக்கிறது. அன்றைய நிலையில் எம்.பி.பி.எஸ். படிப் புக்கு பல லட்சங்கள் செலவா கும். இதே வருமானம் தொடர்ந் தால் இவரால் அவ்வளவு பெரிய தொகையை ஈட்ட முடியாது. மகன் நன்றாக படிப்பதால் அவ னுடைய தகுதி அடிப்படையில் எம்.பி.பி.எஸ்.
சீட்டு வாங்கும்படி அவனை உற்சாகப் படுத்துவதே நல்லது. அப்படி தகுதி அடிப்படையில் சீட்டு கிடைத்தாலும் சில லட்ச ரூபாய் தேவைப்படும். அதற்கு இன்றிலி ருந்து மாதம் 2,500 ரூபாயை 15% வருமானம் எதிர் பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் சுமார் ஏழு லட்ச ரூபாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனை எம்.பி.பி.எஸ். படிக்க தேவைப் படும் இதர செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணத்திற்கு..!
சுபஷாலினிக்கு 24 வயதில் திருமணத்தை முடிக்க வேண்டும் என்கிறார். இதற்கு இன்னும் 12 ஆண்டுகள் இருப்பதால் இன்றிலிருந்து மாதம் 2,100 ரூபாயை 15% வருமானம் எதிர் பார்க் கக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்டுக ளில் முதலீடு செய்ய லாம். கிடைக்கக்கூடிய தொகை 8.5 லட்சத்தைப் பயன்படுத்தி திரு மணத்தைச் சிக்கனமாக செய்து முடிக்கலாம். இன் னும் கொஞ்சம் அதிக செல வாகும் என்று நினைத்தால் வருமான வசதிக்கு ஏற்ப முதலீட்டை பெருக்கிக் கொள்வது அவசியம்.
ஹரிகிஷோருக்கு 28 வயதில்  தான் கல்யாணம் என்பதால், பணத்தேவைக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. தவிர, மகனுக்கான திரு மணச் செலவு குறைவுதான் என்று கணே சன் சொல்வதால் இன்றிலிருந்து மாதம் 400 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க் கக்கூடிய மியூச்சுவல் ஃபண் டில் முதலீடு செய்ய வேண்டும். இப்படி கிடைக்கும் ஆறு லட்ச ரூபாயை கல்யாணத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலே சொன்னதுபோலவே, அன் றைய நிலையில் இந்த பணம் போ தாது என்று நினைத்தால், வருமான வசதிக்கேற்ப முதலீட்டை பெருக்க வேண்டும்.
வீடு கட்ட..!
இன்னும் ஐந்து வருடத்தில் புதுக்கோட்டையில் ஐந்து லட்சத்தில்மனை வாங்கி 15 லட்ச ரூபாய் செலவில் புது வீடு கட்ட வேண்டும் என்கிறார். இதற்கு ஏற்கெனவே இருக்கும் சொத்துக் களை விற்று அந்த பணத்தை பயன் படுத்தலாம் என்பது கணேசனின் ஐடியா.
இன்றைய நிலையில் இவரிடம் கிராம த்தில் 26 சென்ட் (தற்போதைய மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்) நிலம் இருக்கி றது என்கிறார். இது இன்னும் ஐந்து வருடத்தில் 16 லட்ச ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது. இதே கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டின் இன்றைய மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இது இன்னும் ஐந்து ஆண்டு கள் கழித்து 10 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆக, ஐந்து ஆண்டுகள் கழித்து இருக்கும் மொத்த சொத்தின் மதிப்பு 26 லட்சம் ரூபாய்.
இதை பயன்படுத்திக் கொண்டு மீதி தேவைப்படும் தொகைக்கு யூலிப் பாலிசி களில் இருந்து கிடைக்கக் கூடிய முதிர்வுத் தொகை நான்கு லட்சம் ரூபாயை பயன்படுத்திக் கொள்ளலாம். இருக்கும் சொத்துக்களை விற்று வீடு கட்டிக் கொள்ள லாம் என்கிற மனோ பாவம் அன்றும் இருக்கு மானால் கணேசன் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.
ஓய்வு காலத்திற்கு..!
ஓய்வு காலத்திற்காக மேலே சொன்ன முதலீடுகள் போக மீதமி ருக்கும் 5,200 ரூபாயிலிருந்து இப்போதைக்கு 3,200 ரூபாயை மட்டும் எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய லாம். தொடர்ந்து 18 ஆண்டுகள் இந்த முதலீடு தொடர்ந்தால் முதலீடு முதிர்வின்போது கிடை க்கக் கூடிய தொகை 35.50 லட்சம் ரூபாய்.
தற்போது புதுக்கோட்டை யில் கட்டியிருக்கும் வீட்டுக்காக வாங்கியிருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கடனில் பாக்கி இருக்கும் 3.5 லட்சத்திற்கு மாத இ.எம்.ஐ. 4,500 ரூபாயை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் கட்ட வேண்டும் என் கிறார். ஆறு ஆண்டுகள் கழித்து இந்த வீட்டுக் கடன் முடிந்தபிறகு இ.எம்.ஐ. கட்டி வந்த 4,500 ரூபாயை ஓய்வு காலத்திற்காக 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு 12 ஆண்டுகள் தொடர் ந்தால் கிடைக்கக்கூடிய வருமானம் 18 லட்சம் ரூபாய். சுபஷாலினி யின் கல்வித் தேவை முடிந்த பிறகு, அந்த தேவைக்காக முதலீடு செய்துவந்த 2,600 ரூபாயை ஓய்வு காலத்திற் காக தொடர்ந்தால் 13 ஆண்டு களில் கிடைக்கும் வருமா னம் 12.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.
ஹரிகிஷோரின் கல்வித் தேவை முடிந்தபிறகு, அதற்காக முதலீடு செய்துவந்த 2,500 ரூபா யை ஓய்வு காலத்திற்காக தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானம் 4.7 லட்சம் ரூபாய்.
அதேபோல் சுபஷாலினியின் திரு மணத் தேவைகள் முடிந்த பிறகு அதற்காக செய்துவந்த முதலீடு 2,100 ரூபாயை ஆறு ஆண்டுகள் தொடர்ந்தால் கிடைக்கும் வரு மானம் 2.5 லட்சம் ரூபாய். ஆக, ஓய்வு காலத்திற்கு முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த வருமானம் 72 லட்சம் ரூபாய்.
கணேசனுக்கு ஓய்வு காலத்தில் 86.5 லட்சம் இருந்தால்தான் அன்றைய நிலையில் அதிலிருந்து மாதம் 35,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மேலே சொன்ன முதலீடுகளினால் 72 லட்சம் ரூபாய் தான் கிடைக்கிறது. அதனால் வருமானம் உயர உயர, ஓய்வு காலத் திற்கான முதலீட்டை உயர்த்திக் கொள்வது நல்லது!